உத்திர பிரதேசம் வாரணாசியை அடுத்த கிராமத்தில் உள்ள மசூதி இமாம் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக பலியானார்.
உத்திர பிரதேசத்தில் பாஜக தலைமையில் யோகி ஆதித்யநாத் பதவியேற்றது முதல் பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
மேலும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் தொடர்ந்து தொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாரணாசியிலிருந்து 110 கி.மீ தூரத்தில் உள்ள நசீர்பூர் என்ற கிராமத்தில் நான்குபேர் கொண்ட கும்பல் மசூதியில் மாமிச துண்டுகளை வீசியுள்ளனர்.
அப்போது அங்கு தொழுகை நடத்தி முடித்திருந்த மசூதி இமாம் 70 வயது முஹம்மது யூனுஸ் மற்றும் முஹம்மது ஜப்பார் ஆகியோர் ஏதோ மசூதியின் மீது வீசப்படுகிறதே என வீசப்பட்ட மாமிசத்தை எடுத்து பார்க்க நேரிட்டபோது திடீரென அந்த கும்பல் யூனுஸ் மற்றும் முஹம்மது ஜப்பார் ஆகியோர் மீது துப்பாகியால் சுட்டுள்ளது.
இதில் யூனுஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முஹம்மது ஜப்பார் படுகாயமடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் யூனுஸ் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. முஹம்மது ஜப்பார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது. ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்தியாவில் பல பகுதிகள் பதற்றம் மிகுந்ததாக காணப்படுகிறது.
குறிப்பாக வட மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.